kamadenu 2023 09 732ef9ab a02c 458d 8830
உலகம்செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

Share

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர் அதிகமாக பாதிக்கப்பட்டது.

வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

முதற்கட்டமாக 296 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 672 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் துரித கதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரபாத் நகரில் 1,000 கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...

25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...