Seronik Moon and clouds 800x599 1
உலகம்செய்திகள்

நிலாவின் சுற்றளவு குறைகிறது : திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அறிவியலாளர்கள்!

Share

நிலாவின் சுற்றளவு குறைகிறது : திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அறிவியலாளர்கள்!

சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியுடன் ஒப்பிடும் போது, நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும்.

இதனால், அதன் சுற்றளவு மெதுவாக குறைந்து கொண்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் நிலாவின் சுற்றளவு மேலும் குறையும் எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால், நிலாவில் நிலநடுக்கம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம் பூமியை போல் சாதாரணமாக இருக்காது.

அவை சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பூமியிலிருந்து நிலாவுக்கு செல்பவர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.

நிலாவின் தென் துருவத்தில் அதிக நிலநடுக்கம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகியுள்ளதாக அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த புதிய தகவல்கள் மூலமாக பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நிலா பயணங்களை, மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலாவின் சுற்றளவு குறைவதால் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ள விண்வெளி ஆய்வாளர்கள், பூமியிலிருந்து விண் வெளிப்பயணம் மேற்கொள்ளும் நாடுகள் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....