ww 1 scaled
உலகம்செய்திகள்

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

Share

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

இந்திய மாநிலம், மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்திய மாநிலம், மிசோரத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குச்சாவடிக்கு, மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா காலையில் வாக்களிக்க வந்தார்.

அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை, விரைவில் சரிசெய்துவிடுவோம் என அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.

மேலும், சிறிது நேரம் காத்திற்கும் படியும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஜோரம்தங்கா காத்திருந்தார்.

ஆனாலும், அதிகாரிகளால் உடனடியாக இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் முதலமைச்சர் ஜோரம்தங்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், அவர் பின்னர் வந்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...