ww 1 scaled
உலகம்செய்திகள்

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

Share

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

இந்திய மாநிலம், மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்திய மாநிலம், மிசோரத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குச்சாவடிக்கு, மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா காலையில் வாக்களிக்க வந்தார்.

அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை, விரைவில் சரிசெய்துவிடுவோம் என அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.

மேலும், சிறிது நேரம் காத்திற்கும் படியும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஜோரம்தங்கா காத்திருந்தார்.

ஆனாலும், அதிகாரிகளால் உடனடியாக இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் முதலமைச்சர் ஜோரம்தங்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், அவர் பின்னர் வந்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...