WhatsApp Image 2024 12 12 at 2.03.40 PM 2
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் அமைச்சர் பலி

Share

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் அமைச்சர் பலி

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி (Khalil Haqqani) கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது காபுலில் (Kabul) உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக கலில் ஹக்னி செயல்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், இவரது அமைச்சக அலுவலகத்திற்கு வந்த நபர் தன் உடம்பில் மறைத்து கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

குறித்த தாக்குதலில் அமைச்சர் உட்பட அலுவலக ஊழியர்கள் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்அரசியல்இலங்கை

டிக்கோயா மருத்துவமனை சவச்சாலையில் உடலத்திற்கு அவமரியாதை: ஊழியர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்

ஹட்டன் – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலத்திற்குச் சவச்சாலையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக்...

10 2
செய்திகள்உலகம்

அமெரிக்க – பிரிட்டன் உறவில் விரிசல்: பிரதமர் கீர் ஸ்டார்மரை பகிரங்கமாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க...

09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...

08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...