உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவதாக புகாரளித்த புலம்பெயர்ந்த பெண்

rtjy 106 scaled
Share

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், தனக்கு வேலை கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், அடித்துத் துன்பப்படுத்துவதாகவும் புகாரளித்தமை அவருக்கே பாதகமாக மாறியுள்ளது.

ஜெனீவாவில் வீடொன்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவந்த அந்தப் பெண், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர் ஆவார்.

ஆகவே, அவரது புகார் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாக அந்த பெண் மீதே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாடுகடத்தப்பட இருப்பதாகவும் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிட்டுள்ளது. அந்த அமைப்பின் நிபுணர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அந்த பெண்ணுக்கெதிராக பாரபட்சம் காட்டப்படுவதாலும், சுவிட்சர்லாந்தில் நியாயமற்ற வகையில் நடந்த விசாரணைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்த வழக்கு தற்போது பெடரல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டுள்ளது. இதுவரை தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

ஆகவே, வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் தலையிட்டுள்ளது தங்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களுடைய குற்றச்சாட்டுகளையும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...