24 65ffb1df7742a
உலகம்செய்திகள்

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்

Share

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்

லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் சடலங்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகவலை IOM என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அவர்களின் இறப்புக்கான காரணம் மற்றும் அவர்கள் எந்த நாட்டினர் என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை என்றும்,

ஆனால் அவர்கள் பாலைவனத்தின் வழியாக மத்திய தரைக்கடலை நோக்கி கடத்தப்பட்ட நிலையில் இறந்ததிருக்கலாம் என்றே நம்புவதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா மன்றத்தின் ஒரு பிரிவான IOM அமைப்பு குறிப்பிடுகையில்,

ஒரே கல்லறையில் 65 சடலங்களை அடக்கம் செய்துள்ள சம்பவம் உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து லிபியா அரசாங்கம் விசாரணை முன்னெடுப்பதாக IOM தெரிவித்துள்ளது.

தொடர்புடைய கல்லறையானது தென்மேற்கு லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. புலம்பெயர் மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற விதிகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர் மக்களுக்கு தோதான இடங்களில் ஒன்றாக லிபியா உள்ளது. தற்போது மீட்கப்பட்ட சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போதுமான தரவுகளை சேகரிக்க இருப்பதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவில் இருந்து புறப்பட்ட சிறு படகு ஒன்று விபத்தில் சிக்கி, 60 புலம்பெயர் மக்கள் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்தே, தற்போது பாலைவனத்தில் 65 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

2023ல் மட்டும் இதுபோன்ற ஆபத்தான செயற்பாடுகளில் சிக்கி, புலம்பெயர் மக்கள் 8,565 பேர்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...