24 664eeba0d5d22
உலகம்செய்திகள்

காற்றின் வேகத்தில் கவிழ்ந்த தேர்தல் பிரசார மேடை: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

Share

காற்றின் வேகத்தில் கவிழ்ந்த தேர்தல் பிரசார மேடை: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மெக்சிகோவில் பேரணியின் போது மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பலத்த காற்று காரணமாக மேடை இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்த துயர சம்பவம் புதன்கிழமை மாலை நிகழ்ந்தது.

அத்துடன் இந்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

வடக்கு மெக்சிகோவின் San Pedro Garza Garcia என்ற பகுதியில் மத்திய-இடது ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸின் (Jorge Alvarez Maynez) பிரச்சார கூட்டத்தின் போது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அல்வாரெஸ் மேனெஸ் பேசிக் கொண்டிருந்த போது, பலத்த காற்று சுழற்சி மேடை அமைப்பையே இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்துக்குப் பிறகு மக்கள் கீழே விழும் இடிபாடுகளில் இருந்து தப்பி ஓட முயன்றதால், அங்கு பதற்றமும் குழப்பமும் நிலவியது, மேலும் பொதுமக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யவும் போராடினர்.

மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

மரண விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இரவு முழுவதும் நீடித்தன.

Share
தொடர்புடையது
Police 2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின்...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...

images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி...

25 693a84d09bd08 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் கனமழை: நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...