25 684e82bc96fa6
உலகம்செய்திகள்

தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Share

ஈரான்(Iran) தலைநகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தஞ்சமடைய, ஈரான் அரசு தனது அடித்தள மெட்ரோ நிலையங்கள், மசூதிகள் மற்றும் பள்ளிகளை 24 மணி நேரமும் (24/7) திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்க பேச்சாளர் பத்மே மொஹஜெரானி தனது டெலிகிராம் பதிவில் கூறியதாவது,

“இன்று இரவு முதல், மெட்ரோ நிலையங்களும் மசூதிகளும் பாதுகாப்பான இடங்களாக 24 மணி நேரமும் திறந்திருக்கும். மக்கள் பள்ளிகளையும் பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்தலாம்.

தெஹ்ரானின் நகர மன்றத் தலைவர் மெஹ்தி சாம்ரான் கூறுகையில்,

“தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் முழுமையாக தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு முகாம்கள் இல்லாத நிலைதான் உள்ளது.

எனவே, வாகன நிறுத்துமிடங்களும், உயரமான கட்டடங்களும் அவசர நிலைகளுக்குப் பயன்படுத்தத்தக்க இடங்களாக மாற்றப்படலாம்.

இஸ்ரேலின் இராணுவம் (IDF) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் (missiles) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மேலும் அவை தடுக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது,

“ஹோம் ஃபிரண்ட் கமாண்டிலிருந்து எச்சரிக்கை வெளியிடப்பட்டதும், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக சென்று அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வரக் கூடாது.” “பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியே வருவதற்கு, தெளிவான உத்தரவு வந்த பிறகு மட்டுமே அனுமதி உள்ளது,” என வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...