24 6694dc350b814
உலகம்செய்திகள்

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

Share

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் செம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா அணி தனதாக்கியுள்ளது.

கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடிக்கவில்லை.

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதன்படி போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

இது ஆர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...