முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்
உலகம்செய்திகள்

முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்!

Share

முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்

மெக்சிகோவில் நடந்த ஒரு திருமணக் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணத்தில் ஒரு மேயர் தான் மணமகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணமகள் யார் என்பதுதான். மேயர் ஒரு முதலையை மணமகளாக ஏற்றுக்கொண்டார்.

தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா (Victor Hugo Sosa), நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் ஒரு பெண் முதலையை திருமணம் செய்துகொண்டார்.

அவர் அலிசியா அட்ரியானா என்ற பெண் முதலையை இந்த பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டார். Caiman இனத்தைச் சார்ந்த இந்த முதலை, உள்ளூர் கதைகளில் “இளவரசி பெண்” குறிப்பிடப்பட்டுள்ளது.

சோண்டல் மற்றும் ஹுவே பழங்குடியினக் குழுக்களுக்கு இடையேயான அமைதியை நினைவுகூரும் வகையில் இந்த திருமண சடங்கு 230 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

மேயர், சோண்டல் பழங்குடியினரின் மன்னராக உருவெடுத்து, முதலையை மணந்து, இரு கலாச்சாரங்களின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துகிறார்.

சடங்கின் ஒரு பகுதியாக, பாரம்பரிய வெள்ளை நிற திருமண ஆடையில் மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட முதலை திருமண இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மணமக்கள் கிராம வீதி வழியாக இசைக்கருவிகள் மற்றும் இசைக்கருவிகள் மேளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெருவில் நடந்து செல்லும் போது மேயர் மணமகளை கையில் எடுத்தார். மேயர் மணமகளை முத்தமிட்டவுடன் திருமண விழா முடிந்தது. முதலைக்கு முத்தம் கொடுக்கும்போது கடிக்காமல் இருக்க அதன் வாயை கட்டிவைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான திருமணத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வித்தியாசமான திருமணம் ஒக்ஸாவில் நடந்தது. முதலி சோண்டல் சமூகத்தால் பூமியின் பிரதிநிதியாக மதிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...