south africa shooting 3
உலகம்செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: கேப் டவுனில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி!

Share

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் மர்மக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவீன ரக துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல் திடீரென இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) அல்லது அதனுடன் தொடர்புடைய நிழல் உலகக் கும்பல்களின் மோதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் கை ஓங்கியுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின்படி, அங்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் காரணமாக தினமும் சராசரியாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழு மோதல்கள் காரணமாக கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தென்னாப்பிரிக்கப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...