south africa shooting 3
உலகம்செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: கேப் டவுனில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி!

Share

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் மர்மக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவீன ரக துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல் திடீரென இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) அல்லது அதனுடன் தொடர்புடைய நிழல் உலகக் கும்பல்களின் மோதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் கை ஓங்கியுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின்படி, அங்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் காரணமாக தினமும் சராசரியாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழு மோதல்கள் காரணமாக கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தென்னாப்பிரிக்கப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...