24 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அரசு தீர்மானம்

Share

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அரசு தீர்மானம்

அமெரிக்காவின் (United States) சமூக பாதுகாப்பு நிறுவனம், அதன் பணியாளர்களை குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 7,000 பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 மில்லியன் வயோதிப அமெரிக்கர்களுக்குச் சலுகைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணியாளர்களின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினது (Donald Trump) தீர்மானமாகும்.

இந்தநிலையில், ஒவ்வொரு மாதமும் 73 மில்லியன் ஓய்வுபெற்ற மற்றும் விசேட தேவையுடைய அமெரிக்கர்களுக்குக் காசோலைகளை அனுப்பும் சமூக பாதுகாப்பு நிறுவனம் அதன் பணியாளர்களை 12 சதவீதத்திற்கும் அதிகமானோரைக் குறைக்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது பிராந்திய அலுவலகங்களை மூடவுள்ளதாகவும் அமெரிக்க சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...