23 656f552addb01 md
உலகம்செய்திகள்

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Share

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

பிரித்தானிய கிராமம் ஒன்றில், நிறைமாத கர்ப்பிணி ஒருவரைக் கத்தியால் குத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேல்ஸ் நாட்டிலுள்ள Aberfan என்னும் கிராமத்தில், ஒரு பெண் தன் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக வந்துள்ளார். அவர் பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வரவும், அங்கு நீண்ட நேரமாக அவரது வருகைக்காக காத்திருந்த ஒருவர், அந்தப் பெண்ணை கத்தியால் சரமாரியாக ஐந்துமுறை குத்தியுள்ளார்.

நேற்று காலை 9.10 மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், மக்கள் ஓடிவந்ததால் கத்தியால் குத்தியவர் தப்பியோடியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்ட 29 வயது பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரது பெயர் Andreea Pintilli. கிறிஸ்துமஸ் நேரத்தில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்றாலும், அவர் குத்தப்பட்டதும் உடனடியாக ஓடிவந்தவர்களில் ஒருவர் Katie Roberts (31) என்னும் செவிலியர் என்பதால், Andreeaவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கருதப்படுகிறது.

ஏழு மணி நேரத்திற்குப் பின், வீடு ஒன்றில் பதுங்கியிருந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். 28 வயதான அவர், Andreeaவுக்கு அறிமுகமானவர்தான் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

இந்த சம்பவம் காலை நேரத்தில் நிகழ்ந்ததால், பள்ளிக்கு வந்த பிள்ளைகளும், பிள்ளைகளை பள்ளியில் விடவந்த பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

என்றாலும், கத்தியால் குத்தப்பட்ட Andreeaவுக்கோ, அவரது வயிற்றிலிருந்த குழந்தைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...