24 65fba6f0460ac 1
உலகம்செய்திகள்

மூளைச்சாவு அடைந்து பின் உயிர்பிழைத்த நபர்

Share

அமெரிக்காவில் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்ற நபர் ஒருவர் போராடி நோயில் இருந்து மீண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 மில்லியன் மக்களை செப்சிஸ் (Sepsis) எனும் கொடிய நோய் பாதிக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் இறப்புக்கான 3வது பொதுவான காரணமாக செப்சிஸ் நோய் உள்ளது.

அதாவது ஆண்டுக்கு 2,70,000 பேரை இந்நோய் கொல்கிறது என CDC அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நோயை கண்டறிவது கடினமாக இருந்தாலும், நோயாளிக்கு வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்டால், இது பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியது.

ஸ்டீவன் என்ற நபர் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டின் பிற்பகுயில் ஆபத்தான இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக, அவரது சகோதரி வெளியிட்ட டிக்டோக் வீடியோக்கள் தெரிவித்தன.

அவருக்கு கால் இடுப்புப் பகுதியில் இருந்து வளர்ந்த முடியை அகற்றும் முயற்சியில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் விளைவாக பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக இரத்த உறைவு, நிமோனியா, உறுப்பு செயலிழப்பு மற்றும் நுரையீரல் நிலை ARDS – கடுமையான சுவாசக் கோளாறு ஆகிய ஆபத்தான சிக்கலுக்கு வழிவகுத்தது.

அவரது இதயத்தை இந்த பாக்டீரியா நோய்த்தொற்று அடைந்துவிட்டது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தபோது, ஸ்டீவனின் மிகவும் மோசமாக இருந்ததால் அவரால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியவில்லை.

இதனால் அவரது உடலில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களின் காரணமாக, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் அவர் வைக்கப்பட்டு குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவித்த மருத்துவர்கள், உயிர் பிழைப்பதற்கான 4 சதவீத வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

கோமாவில் இருந்த மாதம் முழுவதும் ஸ்டீவனுக்கு பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, உறுப்பில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு பல அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஸ்டீவனால் சுயமாக சுவாசிக்க முடிந்தது. மேலும் அவர் கோமாவில் இருந்து விடுபட்டார். மூளை பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், ஸ்டீவன் தனது பயணத்தில் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...