coping with Patient death
உலகம்செய்திகள்

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

Share

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் சூரஜ் தன் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமும் இருசக்கர வாகனம் கேட்டு அனிதாவை தொல்லை செய்துள்ளனர்.

தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான அனிதா கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் சூரஜ் தனது தந்தையுடன் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்ப நாய் உதவியுடன் அனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளார்.

பொலிஸார் தேடுதல் வேட்டை பின்னர் அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து தப்பியோடிய சூரஜ் குடும்பத்தினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக்காக இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...