coping with Patient death
உலகம்செய்திகள்

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

Share

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் சூரஜ் தன் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமும் இருசக்கர வாகனம் கேட்டு அனிதாவை தொல்லை செய்துள்ளனர்.

தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான அனிதா கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் சூரஜ் தனது தந்தையுடன் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்ப நாய் உதவியுடன் அனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளார்.

பொலிஸார் தேடுதல் வேட்டை பின்னர் அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து தப்பியோடிய சூரஜ் குடும்பத்தினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக்காக இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...