கண்ணுறங்காத விசித்திர நபர்
உலகம்செய்திகள்

60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்காத விசித்திர நபர்

Share

கண்ணுறங்காத விசித்திர நபர்!

வியட்நாம் நாட்டவரான 80 வயது நபர் ஒருவர் கடந்த 60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது என அவர் நம்பினாலும், இந்த சிக்கலுக்கு பின்னால் வியட்நாம் போரும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

தற்போது 80 வயதாகும் Thai Ngoc என்ற முதியவர், கடந்த 1962ல் இருந்தே நிரந்தரமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார். Thai Ngoc என்பவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எவரும், இவர் ஒருமுறை கூட தூங்கியதாக பார்த்ததில்லை என கூறுகின்றனர்.

பல தரப்பு மருத்துவ நிபுணர்கள் Thai Ngoc அனுபவிக்கும் இந்த நிலையை ஆய்வு செய்தும், இதுவரை அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி தூக்கம் இல்லாமல் அவர் இருந்தாலும் உடல் நிலையில் நன்றாக இருக்கிறார் எனவும், ஓய்வு இல்லாததால் இருந்தால் கூட அவருக்கு எந்த மருத்துவ பாதிப்பும் இல்லை எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நொடி தூக்கத்தில் ஆழ்ந்ததாக கூட தமக்கு நினைவில் இல்லை என்கிறார் அவர். மேலும், கிரீன் டீ மற்றும் அரிசி உணவில் இருந்து தயாரிக்கப்படும் மது ஆகியவற்றில் இருந்து தான் தமக்கு தேவையான ஆற்றலை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வியட்நாம் போரில் தமது கை சேதமடைந்த பின்னர், அவர் தூங்குவதை பார்த்ததில்லை என்கிறார் உறவினர் ஒருவர். போர் சூழல் காரணமாக ஏற்படும் உளவியல் பாதிப்பும் ஒரு காரணம் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

வியட்நாமில் 1955 முதல் 1975 வரையான காலகட்டத்தில் கடுமையான போர் நடந்துள்ளது. அதில் ஒரு கை பாதிக்கப்பட்டவர் Thai Ngoc. தற்போது பகல் முழுவதும் விவசாயத்தில் ஈடுபடும் Thai Ngoc, இரவானால் மது தயாரிக்கும் பணியில் ஈடுபடுவாராம்.

தூக்கமின்மை இருந்தாலும், விடிகாலை 4 மணியளவில் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்வாராம். ஆனால் தூங்குவதில்லை என்கிறார்கள் உறவினர்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...