ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம்
உலகம்செய்திகள்

ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம்

Share

ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம்

அமெரிக்காவில் ஏரி ஒன்றில் குதித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில், அவர் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள Lake Lanier என்னும் ஏரியில்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 24 வயது இளைஞர் ஒருவர் ஏரியில் குதித்த அடுத்த கணம், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த ஏரியின் பின்னணியில் பெரிய கதை இன்று உள்ளது. Lanier ஏரி ஒரு செயற்கை ஏரியாகும். அதாவது, மக்கள் வாழ்ந்த ஒரு இடத்தை காலி செய்து, அந்த இடத்தை ஆற்று நீரால் நிரப்பி அந்த ஏரியை செயற்கையாக உருவாக்கினார்களாம்.

அதற்காக அங்கு வாழ்ந்த சுமார் 250க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனவாம். ஏரியை தண்ணீரால் நிறைத்தாலும், அதன் அடியில் இன்னமும் வீடுகள் அப்படியே உள்ளனவாம்.

எல்லாவற்றிற்கும்மேல், அங்கிருந்த 29 கல்லறைகள் அப்படியே தண்ணீருக்கடியில் உள்ளனவாம். ஆக, அந்த ஏரி குறித்து பல திகில் கதைகள் உலாவுகின்றனவாம்.

Share

1 Comment

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...