எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்
உலகம்செய்திகள்

எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்

Share

எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்

ஜேர்மன் தலைநகர் பெர்லிலிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பற்றிய நிலையில், அந்தக் கட்டிடத்திலிருந்து குதித்த இருவர் பலியாகினர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பெர்லினில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியது. அப்போது, அந்தக் கட்டிடத்திலுள்ள ஜன்னல் ஒன்றின் வழியாக இருவர் குதித்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, குதித்த 45 வயது ஆண் மற்றும் 22 வயது பெண் என அந்த இருவருமே உயிரிழந்துவிட்டனர்.

கட்டிடம் தீப்பற்றிய உடனே இருவரும் மிக மிக விரைவாக குதித்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

15 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் 12ஆவது தளத்தில் தீப்பற்றிய நிலையில், 12ஆவது தளத்திலிருந்து குதித்து அவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த பெண் முதலில் குதித்ததாகவும், பால்கனியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆண், பின்னர் பிடியை விட்டு கீழே விழுந்ததாகவும், முதல் தளத்தில் வாழும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த தீயைப் பற்றவைத்தவர்களே இந்த இருவர்தானோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. யார் அவர்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், எப்படி தீப்பற்றியது, தீவைத்தது அவர்களா, என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...