tamilnirr 3 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவர் வழக்கில் திருப்பம்

Share

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவரின் வழக்கு தொடர்பில் புதிய சாட்சியம் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கை மாணவர் உயிரிழந்ததாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada Jayasundera என்பவர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி Huntingdon வீதியில் வாகனம் மோதி, சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த விவகாரத்தில் Joshua Gregory என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாலையே விபத்து ஏற்பட்டதாகவும், அது இலங்கை மாணவர் உயிரிழந்தமைக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், Oshada Jayasundera-வின் சகோதரர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வர இருப்பதாகவும், தீர்ப்பளிக்கப்படும் நாளும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தனிப்பட்ட அறிக்கை அளிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி ரிச்சர்ட் தாட்சர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தண்டனையை எதிர்கொள்ளும் ஜோசுவா கிரிகோரி நீண்ட காலமாக உளவியல் பாதிப்பை எதிர்கொண்டு வருபவர் என அவரது தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 20260123 WA0115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டட்லி சிறிசேனவின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ. 700 இலட்சம் அபராதம்! உண்மைகளை மறைத்ததாகச் சுங்கத்துறை நடவடிக்கை!

பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன இறக்குமதி செய்த அதிநவீன ‘ரோல்ஸ் ராய்ஸ்’ (Rolls-Royce) காருக்கு, இலங்கைச்...

images 2 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்டத்தில் ரூபாய் 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும்,...

images 1 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணம்: பதுளை மக்களுக்குச் சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து வந்த சிறப்பு மருத்துவக் குழு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்சா” முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய...

22 624c54ac70b92
உலகம்செய்திகள்

இந்த ஆண்டு $1.5 பில்லியன் டொலர் முதலீட்டை இலக்கு வைக்கும் இலங்கை! கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்குமா?

இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலங்கை இலங்கை...