அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுகளைத் தடுக்க நீதிபதிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் 6-3 தீர்ப்பை அமெரிக்க உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தேசிய அளவிலான தடைகளை (nationwide injunctions) கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு சவாலாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது ட்ரம்பின் நிர்வாகக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பை ட்ரம்ப்”மிகப்பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளதாகவும், இது அவரது அமெரிக்க முதலிடம் (America First) அஜெண்டாவை(விவாதிக்கப்படவிருக்கும் அல்லது செய்யப்படவிருக்கும் விடயங்களின் பட்டியல்) முன்னெடுப்பதற்கு உதவும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனன.
மேலும், குறிப்பாக புலம்பெயர்ந்தோர் கொள்கைகள் மற்றும் பிற நிர்வாக உத்தரவுகளைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.