1 14 scaled
உலகம்செய்திகள்

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

Share

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

அமெரிக்காவில் மைனே மாகாண மக்களை மொத்தமாக நடுக்கத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ள துப்பாக்கிதாரியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த Lewiston நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பந்துவீச்சு மையம், மற்றும் ஒரு மதுபான விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மாகாணம் மொத்தம் பீதியில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான Robert Card என்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

மேலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் எனவும், அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் எனவும், அவர் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கோடையில் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...