1 14 scaled
உலகம்செய்திகள்

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

Share

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

அமெரிக்காவில் மைனே மாகாண மக்களை மொத்தமாக நடுக்கத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ள துப்பாக்கிதாரியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த Lewiston நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பந்துவீச்சு மையம், மற்றும் ஒரு மதுபான விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மாகாணம் மொத்தம் பீதியில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான Robert Card என்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

மேலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் எனவும், அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் எனவும், அவர் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கோடையில் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....