உலகம்செய்திகள்

நடிகர் வடிவேலு பாணியில் திரும்ப திரும்ப பொய் சொல்லும் மு.க.ஸ்டாலின்: கிண்டலடிக்கும் அண்ணாமலை

Share

நடிகர் வடிவேலுவை போல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திரும்பத் திரும்ப பொய் பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்துள்ளார். இதனால், திருச்சியை சுத்தம் செய்யும் பணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திருச்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் பாஜகவினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் .. ஒப்பந்தம் மீறியதால் முன்னாள் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்த Wipro நிறுவனம்
ரூ.25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் .. ஒப்பந்தம் மீறியதால் முன்னாள் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்த Wipro நிறுவனம்
தமிழக அரசு சுத்தம் என்ற கொள்கையை கடைபிடிப்பதே இல்லை. அதனால் நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். அரசு அதனை மேம்போக்காக செயல்படுத்துகிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், “நடிகர் வடிவேல் பாணியில் பெருமழையை எதிர்பார்க்கவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகையை இவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் தூத்துக்குடி மாவட்டம் இந்த அளவுக்கு வெள்ள பாதிப்புகளை சந்தித்திருக்காது. எத்தனை வெள்ளம் வந்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை. இவர்களை மக்கள் தான் திருத்த வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...