2 11 scaled
உலகம்செய்திகள்

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண்

Share

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண்

தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர்.

கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம் (Lawrence Campbell), லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்கிவரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருக்க, ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.

பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொட்டரிச்சீட்டோ, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார் கிறிஸ்டல்.

பெரும்பாலான சாதாரண மக்களைப்போலவே, சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான் கிறிஸ்டல் குடும்பத்தினரின் ஆசை. அத்துடன், டிஸ்னி லேண்டுக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்ற ஆசையும் உள்ளது, அதையும் நிறைவேற்றவேண்டும் என்கிறார் கிறிஸ்டலின் கணவரான லாரன்ஸ்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...