24 668c45cc94649
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை

Share

ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை

ஜேர்மனியில்(Germany) கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக, கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாற தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று கடவுச்சீட்டு அலுவலக மூத்த அதிகாரியான ஹெல்மட் டெடி (Helmut Dedy) என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த பலர், விடுமுறையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, எக்ஸ்பிரஸ் டெலிவரியையாவது பெறலாம் என எண்ணி இரண்டாவது முறை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளார்கள்.

அவர்கள் சுமார் 170 யூரோக்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். அப்படி இரண்டு முறை கட்டணம் செலுத்தியுள்ளோரின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தான் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...