24 66461b1e935b5
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு எச்சரிக்கை

Share

பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் வாழும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்கள் உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து பாரிய தங்க கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில் ஈஸ்ட்லீ மற்றும் சவுத்தாம்ப்டனில் 19 தங்க கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது படுக்கையறையில் இரண்டு ஆண்களால் அலுமாரி வழியாக சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 20,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் திட்டமிட்டு ஒழுங்கமைப்பட்ட முறையில் தெற்காசியர்களை குறி வைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்படுவதாக ஈஸ்ட்லீ மாவட்ட தலைமை அதிகாரி மாட் பாலிங், தெரிவித்துள்ளார்.

அதிக மதிப்புள்ள தங்கம் திருட்டு அதிகரிப்பதை நாங்கள் கண்டுள்ளோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...