பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
லித்துவேனியா உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், தலைநகர் வில்னியஸ் (Vilnius) விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த ஊடுருவல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
இந்த அவசரநிலை காரணமாக, எல்லைப் பகுதிகளில் பொலிஸ், எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இராணுவம் இணைந்து செயற்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் பெலாரஸில் இருந்து சுமார் 600 பலூன்கள் மற்றும் 200 ட்ரோன்கள் லித்துவேனியாவுக்குள் ஊடுருவின. இதனால் 350 விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
பொருளாதார இழப்பு: வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரம் மூடப்பட்டதனால் 7.5 இலட்சம் யூரோ (750,000 Euros) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.