articles2FVCJGuEkoPbB9Y2NvQE6p
உலகம்செய்திகள்

பெலாரஸ் பலூன்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: லித்துவேனியா அவசரநிலை அறிவிப்பு!

Share

பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

லித்துவேனியா உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், தலைநகர் வில்னியஸ் (Vilnius) விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த ஊடுருவல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.

இந்த அவசரநிலை காரணமாக, எல்லைப் பகுதிகளில் பொலிஸ், எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இராணுவம் இணைந்து செயற்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் பெலாரஸில் இருந்து சுமார் 600 பலூன்கள் மற்றும் 200 ட்ரோன்கள் லித்துவேனியாவுக்குள் ஊடுருவின. இதனால் 350 விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பொருளாதார இழப்பு: வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரம் மூடப்பட்டதனால் 7.5 இலட்சம் யூரோ (750,000 Euros) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 69388f5211389
உலகம்செய்திகள்

ஜப்பானின் அமோரி மாகாணக் கடற்கரையில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!!

ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த...

d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae
உலகம்செய்திகள்

மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின்...

1700821783 police officer arrested l
இலங்கைசெய்திகள்

ரூ. 5,000 லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜென்ட், கொன்ஸ்டபிள் கைது!

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (டிசம்பர் 11) காலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு...

articles2F6kbj9SMxjiNxACRUcSNi
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி கோரி ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் கடிதம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக...