tamilnih 22
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த இந்திய வம்சாவளி பிரதமர்

Share

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார்.

இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலம் என இருமுறை பிரதமராக பதவி வகிக்கிறார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்த இவை, 2018யில் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்பு மீதான தடையை ரத்து செய்தார்.

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லியோ வரத்கர் அறிவித்துள்ளார். ”நான் பிரதமர் மற்றும் Fine Gael தலைமைப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட தனது அறிக்கையில், ‘நம் நாட்டை மிகவும் சமமான மற்றும் நவீனமான இடமாக மாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போது பதவி விலகுவதற்கான எனது காரணங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல். எனக்கு வேறு எதுவும் வரிசையாக இல்லை, என் மனதில் எதுவும் இல்லை. என்னிடம் திட்டவட்டமான தனிப்பட்ட அல்லது அரசியல் திட்டங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தின் ஈஸ்டர் இடைவேளைக்குப் பின்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய அனுமதிக்கும் வகையில், ஏப்ரல் 6ஆம் திகதி கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் லியோ வரத்கர். 45 வயதாகும் லியோ வரத்கர் 2017யில் முதல் முறையாக பிரதமரானபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...