tamilnih 22
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த இந்திய வம்சாவளி பிரதமர்

Share

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார்.

இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலம் என இருமுறை பிரதமராக பதவி வகிக்கிறார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்த இவை, 2018யில் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்பு மீதான தடையை ரத்து செய்தார்.

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லியோ வரத்கர் அறிவித்துள்ளார். ”நான் பிரதமர் மற்றும் Fine Gael தலைமைப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட தனது அறிக்கையில், ‘நம் நாட்டை மிகவும் சமமான மற்றும் நவீனமான இடமாக மாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போது பதவி விலகுவதற்கான எனது காரணங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல். எனக்கு வேறு எதுவும் வரிசையாக இல்லை, என் மனதில் எதுவும் இல்லை. என்னிடம் திட்டவட்டமான தனிப்பட்ட அல்லது அரசியல் திட்டங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தின் ஈஸ்டர் இடைவேளைக்குப் பின்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய அனுமதிக்கும் வகையில், ஏப்ரல் 6ஆம் திகதி கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் லியோ வரத்கர். 45 வயதாகும் லியோ வரத்கர் 2017யில் முதல் முறையாக பிரதமரானபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...