tamilni 149 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்

Share

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் கனடாவில் பொருளாதார சிக்கலை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக சர்வதே மாணவர்கள் வேலை செய்யும் நேரத்திலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றுக்கு 20 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக வாரம் ஒன்றிற்கு 20 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வேலை செய்யலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது அந்த சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி பழைய சட்டம் எதிர்வரும் 2023 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சில நடுத்தர வர்க்கத்தினை சேரந்த சர்வதேச மாணவர்கள் இந்த வருமானம் வாழ்வாதாரத்திற்கு போதாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...