13 27
உலகம்செய்திகள்

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Share

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் விளைவாக வீதியிர் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த வெள்ளத்தில் ஒரு தொடருந்து தடம் புரண்டதுடன், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் ஸ்பெயின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாது என ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள சிச்வா பகுதியில் செவ்வாய்கிழமை எட்டு மணித்தியாலங்களில் 491 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இது ஸ்பெயினில் ஒரு வருடத்தில் பெய்யும் மழைக்கு சமனானது என அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...

02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...

01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...