உலகம்செய்திகள்

அமெரிக்க தேர்தலில் தலையிடும் பிரித்தானியா: ட்ரம்ப் தரப்பு குற்றச்சாட்டு

24 16
Share

அமெரிக்க தேர்தலில் தலையிடும் பிரித்தானியா: ட்ரம்ப் தரப்பு குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகளை மேற்கொள்வதாக வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

 

குறித்த குற்றச்சாட்டு அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு வேட்பாளர் கமலா ஹரிஸின் பிரசார நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி தன்னார்வமாக செயற்படுவதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.

 

எனினும், வெளிநாட்டு பிரஜைகளுக்கு பணம் செலுத்தி அமெரிக்காவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க முடியாது என அந்நாட்டு சட்டங்கள் கூறுகின்றன.

 

முன்னதாக, பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சியின் செயற்பாட்டுக் குழுவின் மேலாளர் சோபியா பட்டேல் தனது லிங்க்ட்இன் தளத்தில் இட்ட பதிவில், 100 பேரை அமெரிக்காவிற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்தே, ட்ரம்ப் தரப்பினர் தொழிலாளர் கட்சியின் மீது இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

 

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...