24 661a3e078569b
உலகம்செய்திகள்

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

Share

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே வேட்பாளர் இவர் என்பதோடு இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் ஜோர்ஜீவாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வந்துள்ள நிலையில் இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் உலக வங்கியின் (World Bank) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...