25 6838b941ac400
உலகம்செய்திகள்

தென் கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றில் நடந்த மிக மோசமான சம்பவம்!

Share

தெற்குக் கொரிய கடற்படையின் P-3 ரகக் கண்காணிப்பு விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விமானம் மே 29ஆம் திகதி, பகல் 1.43 மணியளவில் தெற்குக்கிழக்கிலுள்ள பொஹாங் நகரிலிருந்து புறப்பட்டதுடன், சில நேரங்களில் பிறகு மண்ணில் மோதி தீப்பிடித்துள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

இந்த விமானம் ஓர் குடியிருப்பு வளாகத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதிக்கு விழுந்தில் தீ விபத்துக்குள்ளாகியது.

அவசரகால சேவைகள் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றதாகவும் பொஹாங் அவசர நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் நிகழ்விடத்தில் தீயை கட்டுப்படுத்த முயன்று வந்தனர். விமானத்தின் எஞ்சிய பாகங்களில் நீர் தெளிக்கப்பட்ட காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.

தற்காலிகமாக P-3 வகை விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து ஒதுக்கி வைத்து, விபத்து காரணம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

இதற்கு முந்தைய நிகழ்வாக, கடந்த டிசம்பரில் ஜெஜூ ஏரின் பயணிகள் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகளில் 179 பேர் உயிரிழந்தனர்.

இது கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றிலேயே மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...