25 6838b941ac400
உலகம்செய்திகள்

தென் கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றில் நடந்த மிக மோசமான சம்பவம்!

Share

தெற்குக் கொரிய கடற்படையின் P-3 ரகக் கண்காணிப்பு விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விமானம் மே 29ஆம் திகதி, பகல் 1.43 மணியளவில் தெற்குக்கிழக்கிலுள்ள பொஹாங் நகரிலிருந்து புறப்பட்டதுடன், சில நேரங்களில் பிறகு மண்ணில் மோதி தீப்பிடித்துள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

இந்த விமானம் ஓர் குடியிருப்பு வளாகத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதிக்கு விழுந்தில் தீ விபத்துக்குள்ளாகியது.

அவசரகால சேவைகள் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றதாகவும் பொஹாங் அவசர நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் நிகழ்விடத்தில் தீயை கட்டுப்படுத்த முயன்று வந்தனர். விமானத்தின் எஞ்சிய பாகங்களில் நீர் தெளிக்கப்பட்ட காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.

தற்காலிகமாக P-3 வகை விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து ஒதுக்கி வைத்து, விபத்து காரணம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

இதற்கு முந்தைய நிகழ்வாக, கடந்த டிசம்பரில் ஜெஜூ ஏரின் பயணிகள் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகளில் 179 பேர் உயிரிழந்தனர்.

இது கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றிலேயே மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியது.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...