8 4 scaled
உலகம்செய்திகள்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

Share

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார்.

அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், Issawiya என்னுமிடத்தைச் சேர்ந்த பாலஸ்தீன இளைஞர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அனுமதியில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...