உலகம்செய்திகள்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

8 4 scaled
Share

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார்.

அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், Issawiya என்னுமிடத்தைச் சேர்ந்த பாலஸ்தீன இளைஞர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அனுமதியில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...