8 4 scaled
உலகம்செய்திகள்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

Share

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார்.

அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், Issawiya என்னுமிடத்தைச் சேர்ந்த பாலஸ்தீன இளைஞர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அனுமதியில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...