tamilni 58 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோயுடன் மன்னர் சார்லஸ்: சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா

Share

புற்றுநோயுடன் மன்னர் சார்லஸ்: சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா

சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருக்க, ராணியார் கமிலா சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ராணியார் கமிலாவே மொத்த பணிகளையும் முன்னெடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் 76 வயதான கமிலா விடுமுறைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை அவர் விமான பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தருணத்தில் யார் பொறுப்பில் இருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பட்டத்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் சிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருப்பதால், அவருக்கு உதவியாக உள்ளார்.

இதனால் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னரே அன்றாட பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் பொதுவெளியில் தென்படவில்லை என்பதுடன், அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

மேலும், தமது ஞானத்தந்தைக்கான இறுதிச்சடங்கிலும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ராணியார் கமிலா மட்டும் ஜனவரி தொடங்கி 13 உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது விடுமுறைக்கு திட்டமிட்டுள்ள கமிலா, மார்ச் 11ம் திகதி மீண்டும் உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...