3 30
உலகம்செய்திகள்

அமெரிக்கா செல்ல இருக்கும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்: முக்கியத்துவம் வாய்ந்த பயணம்

Share

அமெரிக்கா செல்ல இருக்கும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்: முக்கியத்துவம் வாய்ந்த பயணம்

பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா செல்ல இருக்கும் பிரித்தானிய மன்னர்
அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் மன்னரும் ராணியும் அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், தேவையில்லாமல் பேசி, ட்ரம்புடனான உறவைக் கெடுத்துக்கொண்டார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்.

ஹரியோ, தனது ஸ்பேர் என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் உட்கொண்டதாக தெரிவித்த விடயத்தால், அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பின்னர், மன்னர் சார்லசுடைய முகத்துக்காக ஹரியை நாடுகடத்தும் திட்டத்தை ட்ரம்ப் கைவிடக்கூடும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மன்னர் சார்ல்சும் ராணி கமீலாவும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போது, என்ன காரணத்துக்காக மன்னர் அமெரிக்கா செல்கிறார் என்பது தொடர்பான விடயங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிடவில்லை.

என்றாலும், ட்ரம்புடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த பயணம் உதவக்கூடும் என பிரித்தானிய அரசு நம்புகிறது.

இன்னொரு முக்கிய விடயம், அடுத்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதி, அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

2007ஆம் ஆண்டு, மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றபிறகு, வேறு எந்த பிரித்தானிய மன்னரோ ராணியோ அமெரிக்கா செல்லவில்லை என்பதால், மன்னர் சார்லசின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...