tamilni 495 scaled
உலகம்செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் மன்னர் சார்லஸ்: வெற்றிகரமாக முடிந்த புரோஸ்டேட் சிகிச்சை

Share

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் மன்னர் சார்லஸ்: வெற்றிகரமாக முடிந்த புரோஸ்டேட் சிகிச்சை

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வெற்றிகரமான அறுவை சிகிச்சை பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் விரிவடைந்த புரோஸ்டேட் சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை காலை லண்டன் கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக 3 நாள் இரவு மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில், வெற்றிகரமான புரோஸ்டேட் சிகிச்சைக்கு பிறகு மன்னர் சார்லஸ் இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் மன்னர் சார்லஸ் ஓய்வு காரணங்களுக்காக அவரது பொது நிகழ்ச்சி திட்டங்கள் மாற்றி வைக்கப்பட்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை அரச நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து மனைவி கமிலாவுடன் வெளியேறிய மன்னர் சார்லஸ் பொது மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய மற்றும் பார்வையிட வந்த அனைத்து மன்னர் நன்றி தெரிவித்துள்ளார் என்று அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...