tamilni 103 scaled
உலகம்செய்திகள்

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்…

Share

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனது உடல் நல பாதிப்பு காரணமாக எதிர்வரும் சில பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதற்காக, மன்னர் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு நேற்று வழக்கமான சிகிச்சைகள் துவக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது, ஆகவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளார் என்றும், ஆனாலும், ஒரு மன்னராக தான் செய்யவேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள் மற்றும் தனிப்பட்ட வகையிலான சந்திப்புகளைத் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் அதிகமாக யாரையும் சந்திக்கக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனையளித்தாலன்றி, வாரம் ஒரு முறை பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் அவரது பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி, வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் காமன்வெல்த் தின ஆராதனை நடைபெறும் நிலையில், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில் மன்னர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் மே மாதம் கனடாவுக்கும், அக்டோபரில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சமோவா ஆகிய நாடுகளுக்கு காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்துக்காகவும் செல்வதாக இருந்தது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...