39
உலகம்செய்திகள்

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

Share

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

மக்களின் கோரிக்கையையும் மீறி, மன்னர் சார்லஸ், இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்பொன்றை வழங்காமல் வேறு இரண்டு பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வழங்கப்படும் கௌரவத்துக்குரிய உயரிய பொறுப்புகளில் ஒன்று Order of the Garter என்னும் பொறுப்பாகும்.

வரும் திங்கட்கிழமை, அதாவது, ஜூன் மாதம் 17ஆம் திகதி, இந்த Order of the Garter என்னும் விடயம் தொடர்பான Garter Day என்னும் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, இரண்டு பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் மன்னர் சார்லஸ்.

பிரித்தானிய உளவு ஏஜன்சியான MI5இன் director general என்னும் பொறுப்பை வகித்த, Baroness Manningham-Buller என்னும் பெண்ணுக்கு Chancellor of the Order of the Garter என்னும் பொறுப்பையும், Lord Ashton of Hyde என்பவருக்கு, the Master of the Horse என்னும் பொறுப்பையும் வழங்கியுள்ளார் மன்னர்.

நீண்ட காலமாகவே, இளவரசி கேட்டுக்கு Order of the Garter பொறுப்பொன்றை வழங்கவேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், விரைவாக பணிக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

இருந்தும் அவருக்கு Order of the Garter பொறுப்பை வழங்காமல் விட்டுவிட்டார் மன்னர் என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...