tamilni 100 scaled
உலகம்செய்திகள்

கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு

Share

கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு

கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் அவசர நிலை பிறப்பித்துள்ளதுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்தது

ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை அடைய அவசர மற்றும் மீட்புப் படையினர் முயற்ச்சித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...