24 66012413a2927
உலகம்செய்திகள்

புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் கேட் மிடில்டனை விடாது துரத்தும் சிக்கல்

Share

புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் கேட் மிடில்டனை விடாது துரத்தும் சிக்கல்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக காணொளி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது உருவாக்கப்பட்ட காணொளி என்று சமூக ஊடகத்தில் ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளனர் சிலர்.

கடந்த வெள்ளிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தமக்கு புற்றுநோய் உறுதி செய்துள்ளதாகவும், கீமோ சிகிச்சை முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, உலகெங்கிலும் இருந்து அவருக்கு ஆதரவும் ஆறுதலும் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் பரவலாக மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அன்னையர் தின புகைப்படத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள காணொளியும் உருவாக்கப்பட்டது, புதிய தொழில்நுட்பத்தால் அது சாத்தியம் என்றும் சமூக ஊடகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர் சிலர்.

தொடர்புடைய காணொளியில் ஏன் இலை கூட அசையவில்லை என்றும் வாதிடுகின்றனர். சிலர் கேட் மிடில்டனின் கன்னக்குழி இந்த காணொளியில் இல்லையே என குறிப்பிட்டுள்ளனர்.

இது பொய்யான காணொளி என குறிப்பிட்டுள்ள ஒருவர், மிகக் கொடூரமாக, கீமோ சிகிச்சை ஒன்றும் ஆபத்தானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புகைப்பட சர்ச்சையில் கேட் மிடில்டன் சிக்கிய பின்னர், அவர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

இதனாலையே, பொய்களை பரப்பும் பலர் ஆதாயம் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதமானதாலையே, கேட் மிடில்டனை விடாது சிக்கல் துரத்துவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...