7 37
உலகம்

கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ்

Share

கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ்

தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 7ல் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் புயலாக மாறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ப்ளூம்பெர்க் செய்திகள் முன்னெடுத்த ஆய்வுகளிலேயே கமலா ஹாரிஸின் ஆதரவு கரம் ஓங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் 28ம் திகதி வரையான நாட்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்,

கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ் | Kamala Harris Gaining Ground 6 Swing States

மிச்சிகனில் டிரம்பை விட ஹாரிஸ் 11 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார். ஆனால், அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் நெவாடாவில் டிரம்பை விட ஹாரிஸ் 2 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

பென்சில்வேனியாவில் டொனால்டு ட்ரம்ப் 4 புள்ளிகள் முன்னிலை, வட கரோலினாவில் 2 சதவிகிதம் முன்னிலை. ஜார்ஜியாவில் இருவருக்கும் ஒரே பலம். ஏழு மாகாணங்களில் விஸ்கான்சின் மட்டுமே ட்ரம்ப் தனது வெற்றி வாய்ப்பை ஜோ பைடனுடன் ஒப்பிடும்போது ஹாரிஸுடன் குறைத்துக் கொண்டார்.

ஜூலை 1 முதல் 5 வரையான கருத்துக்கணிப்பில் டொனால்டு ட்ரம்ப் அரிசோனாவில் பைடனை விட 3 சதவீத புள்ளிகளால் முன்னிலையில் இருந்தார்; ஜார்ஜியாவில் 1 புள்ளி; நெவாடாவில் 3 புள்ளிகள்; வட கரோலினாவில் 3 புள்ளிகள்; மற்றும் பென்சில்வேனியாவில் 7 புள்ளிகள்.

பைடன் மிச்சிகனில் 5 புள்ளிகளும், விஸ்கான்சினில் 3 புள்ளிகளும் முன்னிலை பெற்றிருந்தார். தற்போது ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், ட்ரம்பை பின்னுக்கு தள்ளி, கமலா ஹாரிஸ் 6 மாகாணங்களில் முன்னிலை கண்டுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, துணை ஜனாதிபதி யார் என அறிவித்த பின்னர், இந்த 7 மாகாணங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் ஒன்றை இரு வேட்பாளர்களும் முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

39
உலகம்செய்திகள்

வலுக்கும் போர் பதற்றம்: அரிய வாய்ப்பை தவற விட்ட பாகிஸ்தான்

இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை பாகிஸ்தான் தவற விட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்...

33 2
உலகம்செய்திகள்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பேச்சுக்கு அழைக்கும் முக்கிய நாடுகள்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே பகைமை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி...

35 2
உலகம்செய்திகள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு

ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும்...