75 ஆண்டுகளுக்கு முன்பு..கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம் – ஜஸ்டின் ட்ரூடோ

24 669187a854d8a

75 ஆண்டுகளுக்கு முன்பு..கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம் – ஜஸ்டின் ட்ரூடோ

நேட்டோ உச்சி மாநாட்டை நிறைவு செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆர்டிக் இறையாண்மையை பாதுகாக்க கனடாவின் பங்கை ஆழப்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ, தனது பயணத்தை இன்று நிறைவு செய்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ’75 ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் கடந்த பாதுகாப்பின் மூலக்கல்லாக, நேட்டோ கூட்டணி ஜனநாயகம், அமைதி, பாதுகாப்பு மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று கூட்டணி முன்னெப்போதையும் விட வலுவாகவும், ஒற்றுமையாகவும் நிற்கிறது. கனடாவும், நேட்டோவும் காலநிலை மாற்ற அபாயம், உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ உச்சி மாநாடு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், ”75 ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோவை கண்டுபிடிக்க கனடா உதவியது மற்றும் அது அன்றிலிருந்து அமைதியையும், செழிப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், நமது பாதுகாப்பை வலுப்படுத்தவும், உக்ரைனுக்கு ஆதரவளிக்கவும், ஆர்டிக் இறையாண்மையைப் பாதுகாக்கவும், புதிய நடவடிக்கைகளுடன் கூட்டணியில் கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version