7 12
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Share

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவில் (canada)பிரதமராக பதவிவகித்து வரும் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)அவருக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

“கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன், ”என்று 53 வயதான ஜஸ்டின் ரூட்டோ இன்று(06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்” என்றார்.

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Announces Resignation

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார்.

தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....