7 12
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Share

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவில் (canada)பிரதமராக பதவிவகித்து வரும் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)அவருக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

“கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன், ”என்று 53 வயதான ஜஸ்டின் ரூட்டோ இன்று(06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்” என்றார்.

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Announces Resignation

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார்.

தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...