7 12
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Share

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவில் (canada)பிரதமராக பதவிவகித்து வரும் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)அவருக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

“கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன், ”என்று 53 வயதான ஜஸ்டின் ரூட்டோ இன்று(06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்” என்றார்.

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Announces Resignation

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார்.

தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...