24 669187a854d8a
உலகம்செய்திகள்

75 ஆண்டுகளுக்கு முன்பு..கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம் – ஜஸ்டின் ட்ரூடோ

Share

75 ஆண்டுகளுக்கு முன்பு..கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம் – ஜஸ்டின் ட்ரூடோ

நேட்டோ உச்சி மாநாட்டை நிறைவு செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆர்டிக் இறையாண்மையை பாதுகாக்க கனடாவின் பங்கை ஆழப்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ, தனது பயணத்தை இன்று நிறைவு செய்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ’75 ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் கடந்த பாதுகாப்பின் மூலக்கல்லாக, நேட்டோ கூட்டணி ஜனநாயகம், அமைதி, பாதுகாப்பு மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று கூட்டணி முன்னெப்போதையும் விட வலுவாகவும், ஒற்றுமையாகவும் நிற்கிறது. கனடாவும், நேட்டோவும் காலநிலை மாற்ற அபாயம், உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ உச்சி மாநாடு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், ”75 ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோவை கண்டுபிடிக்க கனடா உதவியது மற்றும் அது அன்றிலிருந்து அமைதியையும், செழிப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், நமது பாதுகாப்பை வலுப்படுத்தவும், உக்ரைனுக்கு ஆதரவளிக்கவும், ஆர்டிக் இறையாண்மையைப் பாதுகாக்கவும், புதிய நடவடிக்கைகளுடன் கூட்டணியில் கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...