24 65fb33e0938bf
உலகம்செய்திகள்

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

Share

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசினார்.

ஜனாதிபதி ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் வெள்ளை மாளிகையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் மகளிர் வரலாற்று மாத வரவேற்பை நடத்தினர்.

அப்போது, ‘நம்ப முடியாத பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று துணைத்தலைவர் கமலா ஹாரிஸ்’ என ஜோ பைடன் கூறினார்.

இந்த நிலையில், WABC வானொலி தொகுப்பாளரான Sid Rosenberg உடனான நேர்காணலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை கடும் விமர்சனம் செய்தார்.

அவர் பேசுகையில், ”பைடன் நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி மற்றும் அவருக்கு ஒரு துணை ஜனாதிபதி இருக்கிறார். அவர் ஒரு மொத்த பேரழிவு. அவர்கள் மாற்ற நினைக்கிறார்கள், அதற்காக இறக்கிறார்கள். ஆனால் மாற்றத்திற்கு அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஜோ பைடன் குழப்பதைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரே ஒரு குழப்பம் தான். வரலாற்றில் இதுபோன்ற மோசமான அணி இருந்ததில்லை. உண்மையில், கமலா ஹாரிஸ் அவரை விட குறைவான பிரபலம்” என்றார்.

வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், கமலா ஹாரிஸின் செயல்பாடுகளை மறைமுகமாக புகார் செய்கிறார்கள். ஆனால், அவர் வரலாற்றில் முதல் கறுப்பின துணை ஜனாதிபதி என்பதால், பகிரங்கமாக அவரை விமர்சிக்க தயங்குகிறார்கள்.

அதேபோல் அரசியல் விமர்சகர்கள் எப்போதாவது கமலா ஹாரிஸை ஒதுங்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...