24 65fb33e0938bf
உலகம்செய்திகள்

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

Share

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசினார்.

ஜனாதிபதி ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் வெள்ளை மாளிகையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் மகளிர் வரலாற்று மாத வரவேற்பை நடத்தினர்.

அப்போது, ‘நம்ப முடியாத பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று துணைத்தலைவர் கமலா ஹாரிஸ்’ என ஜோ பைடன் கூறினார்.

இந்த நிலையில், WABC வானொலி தொகுப்பாளரான Sid Rosenberg உடனான நேர்காணலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை கடும் விமர்சனம் செய்தார்.

அவர் பேசுகையில், ”பைடன் நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி மற்றும் அவருக்கு ஒரு துணை ஜனாதிபதி இருக்கிறார். அவர் ஒரு மொத்த பேரழிவு. அவர்கள் மாற்ற நினைக்கிறார்கள், அதற்காக இறக்கிறார்கள். ஆனால் மாற்றத்திற்கு அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஜோ பைடன் குழப்பதைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரே ஒரு குழப்பம் தான். வரலாற்றில் இதுபோன்ற மோசமான அணி இருந்ததில்லை. உண்மையில், கமலா ஹாரிஸ் அவரை விட குறைவான பிரபலம்” என்றார்.

வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், கமலா ஹாரிஸின் செயல்பாடுகளை மறைமுகமாக புகார் செய்கிறார்கள். ஆனால், அவர் வரலாற்றில் முதல் கறுப்பின துணை ஜனாதிபதி என்பதால், பகிரங்கமாக அவரை விமர்சிக்க தயங்குகிறார்கள்.

அதேபோல் அரசியல் விமர்சகர்கள் எப்போதாவது கமலா ஹாரிஸை ஒதுங்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...